athiparasakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
athiparasakthi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மா பழுது பட்டால்.... அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

 ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற வரும் ஏற்றமிகு விழாவே தைப்பூச ஜோதி.
  அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
அடக்கி ஆள்வது ஆன்மா தான்:
"ஆன்மிகத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்க வேண்டும். பொறாமையும் பொச்சரிப்பும் இருக்கக் கூடாது. ஒருவரைப் பற்றி மற்றவர் கோள் சொல்வதும், புறம் பேசுவதும் கூடாது. இத்தகைய தகாத பழக்கங்களை வைத்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டும் எனக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை.

மனத்தை அடக்கி ஆளவேண்டும். மனத்தையும் அவயங்களையும் அடக்கி ஆள்வது ஆன்மா தான் என்றாலும் மனத்தை அடக்கி ஆன்மாவைப் பக்குவ நிலைக்குக் கொண்டுவர வேண்டும்."
ஆன்மா பழுது பட்டால்....
"பந்தம், பாசம், பணம் என்றெல்லாம் உங்களை ஆடவைப்பது ஆன்மா தான். வண்டி பழுது பட்டு விட்டால் பழுது பார்த்து ஓட வைக்கலாம். ஆனால் மனிதனின் ஆன்மா என்ற இயந்திரம் பழுதுபட்டுவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது."

அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்க் கூடாது

"என்னுடைய மரம் விழுந்துவிட்டதே! அவன் வைத்த மரம் விழவில்லையே என்று நினைக்காதே! உன் அறிவீனத்தால் ஆழமாக நடாமல் மேலோட்டமாக நட்டுவைத்தாய். அதனால் அந்த மரம் சீக்கிரம் விழுந்துவிட்டது. அடுத்தவன் ஆழமாக நட்டான். அக்கறையாக மரம் வளர்த்தான். அதனால் விழவில்லை. எனவே அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப்பட்க் கூடாது. " - அன்னையின் அருள்வாக்கு

should not become envious of another person.
Do not think that the tree that you have grown has been uprooted whereas the tree planted by another man has not fallen flat! It is because of your ignorance that you have planted it superficially instead of planting it deeply. Hence the tree has fallen down. The other person has planted it deeply. He has nourished the tree with utmost care. That is why it has not fallen down. Hence you should not become envious of another person.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

மன அழுக்கை நீக்கும் பக்தி- அன்னையின் அருள்வாக்கு

அழுக்கை நீக்கும் பக்தி
"உங்கள் மனத்தில் உள்ள அழுக்கை அகற்றிக் கொள்ள வேண்டும்; அறியாமையை அகற்றிக் கொள்ள வேண்டும். மெழுகுவத்தி எரியும் போது அதனுடன் உள்ள அழுக்கும் சேர்ந்து எரியும். அதுபோல உங்களிடம் பக்தி கொழுந்துவிட்டு எரிந்தால் உங்களிடம் உள்ள அழுக்குகளும் அறியாமைகளும் சேர்ந்து எரிந்து மறைந்து விடும்." - அன்னையின் அருள்வாக்கு


Devotion that Removes the Dirt
 You should get rid of the dirt and ignorance in your mind. A candle burns along with its impurities. Similarly when the devotion in you burns brightly, all your mental impurities and ignorant thoughts will get burnt along with it.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

பாவச்செயல்களுக்கு மன்னிப்பு -அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூசை செய்து தான் செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்பு கேட்பது நல்லது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மா பிரிவது எப்போது?
"ஆன்மா எப்பொழுது நினைக்கிறதோ அப்பொழுதுதான் உன்னை விட்டுப் போகும்."

ஆன்மாவை கட்டுப் படுத்து:
"ஒரு இயந்திரம் எப்படி ஒரு குறிப்பிட்ட மின் வேகத்திற்குக் கட்டுப் படுகிறதோ, அதுபோல் ஆன்மாவையும் ஒரு கட்டுப்பாட்டோடு வைத்துக் கொள்ள வேண்டும்."

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:
தாய்பால் கொடுப்பதால் தான் குழந்தைக்கு தாய்ப்பாசம் அதிகம் ஏற்படுகிறது.

 அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:

ஆன்மாவும் இரத்த ஓட்டமும்:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மாவும், உள்ளே ஓடும் இரத்த ஓட்டமும் ஒரே சீராக இருக்க வேண்டும். அதற்கு ஆன்மிகம் தான் சுலபமான வழி."
உனது பொறுப்பு:
"உன் உள்ளே இருக்கும் ஆன்மா என்னுடையதுதான் என்றாலும் அதை நீ உன்னுடையதாக நினைத்து இயக்கிப் பதப்படுத்த வேண்டும்.
உன் எண்ணத்தையும், பார்வையையும் கட்டுப்படுத்த வேண்டும். அந்தப் பொறுப்பு உன்னுடையது."

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
 எங்கும் தேடி அலையாமல், விலை கொடுத்து வாங்கவும்
முடியாமல், விற்கவும் முடியாமல் இருப்பது  பக்தி ஒன்று தான்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாவே உறுதுணை:
"ஆன்மா தான் உடலை இயக்குகிறது. அதுதான் உணவில் ஆசையைத் தூண்டுகிறது. அதுவே உணவில் ஆசை, மற்றவற்றில் ஆசைகளை ஏற்படுத்துகிறது. இவ்வளவுதான் அளவு! என்று சொல்வதும் ஆன்மா தான். பிற உயிர்களைச் சிரிக்க வைப்பதும், பாடவைப்பதும், ஆட வைப்பதும் ஆன்மா தான். உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருப்பதும் ஆன்மா தான்!"

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:
"கண்ணாடியில் தூசுபடிந்து விட்டால் அடிக்கடித் துடைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துகிறீர்கள். அதுபோல் ஆன்மாவிலும் ஆசை, அகந்தை, பொறாமை, கோபம் முதலிய அழுக்குகள் படிகின்றன. அந்த அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவை ஒரு நிலைப்படுத்திப் பக்குவப் படுத்த வேண்டும். ஆன்மா என்ற சக்தி உடலை விட்டுப் போய் விட்டால் எதுவும் இல்லை."

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்- அன்னையின் அருள்வாக்கு

மனக்கட்டுப்பாடும் - மன அமைதியும்
"வயிற்றுவலி வந்துவிட்டதே என்று மருந்து சாப்பிடுகிறாய், அது குணமாகவில்லையென்றால் மறுபடியும் அது எதனால் வந்தது என்று பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டு வேறு ஒரு மாற்று மருந்து சாப்பிடுகிறாய். அதுபோல மனமானது அமைதியைத் தேடுகிறது. அது கிடைக்காவிட்டால் மீண்டும் முயற்சி செய்! உன் மனத்தைக் கட்டுக் கோப்புடன் வைத்துக் கொண்டால் உனக்கு அமைதி கிடைக்கும்." - அன்னையின் அருள்வாக்கு

Self – control and peace
 If you suffer from pain in the stomach you take in medicines. If you are not cured, you go for a medical check-up and an alternative medicine. Your mind seeks peace. If you do not get it, then search again. If you keep your mind under your control then you will get peace.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

அகங்காரமும் - அருளும் - அன்னையின் அருள்வாக்கு

 அகங்காரமும் - அருளும்
உன்னுடைய ஆர்வம் தூய்மையானதாக இருக்கும்போது நீ அகங்காரத்தை எவ்வளவுக்கெவ்வளவு நீக்குகின்றாயோ அவ்வளவுக்கவ்வளவு என் அருள் உன்னிடம் நிறையும். அகங்காரம் குறையக்குறைய அருள் நிரம்பும். அருள் நிரம்ப நிரம்ப அகங்காரம் குறையும். அருளை நிரப்புவது என் கடமை! அகங்காரத்தைச் சிறிது சிறிதாகப் போக்கிக் கொள்வது உங்கள் கடமை." - அன்னையின் அருள்வாக்கு

 Arrogance – Grace
When your enthusiasm is genuine, my Grace will be proportionate to your efforts to eliminate your arrogance. My grace will abound in accordance with the elimination of your arrogance and as grace abounds your arrogance will get eliminated, it is my duty to fill you with Grace! It is your duty to eliminate arrogance.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
கலைகள், கவலைகள், பொருள்கள்,
பொறாமைகள் என்றைக்குமே ஆபத்தானவை.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாதான் அம்மா!
"உங்கள் உள்ளே இருக்கும் ஆன்மா தான் அம்மா! அம்மா தான் ஆன்மா!"
ஆன்மாவில் அழுக்கு அதிகம் படிகிறபோது:

 "அழுக்குத் துணிகளை மூட்டையாகக் கட்டிக் கழுதைமீது வண்ணான் சுமத்துகிறான். அது சுமக்காவிட்டால் - முரண்டு பிடித்தால் சூடு போட்டுச் சுமக்க வைப்பான். அவன் சூடுபோட்டுப் பணிய வைப்பது போல உங்கள் ஆன்மாவில் அழுக்குகள் அதிகம் சேர்கிறபோது அதற்கேற்றபடி அடிகொடுக்கிறேன். உங்களைப் பண்படுத்துகிறேன். பக்குவப் படுத்துகிறேன்."

மனத்தை அலைபாய விடாதே- அன்னையின் அருள்வாக்கு

மனத்தை அலைபாய விடாதே
 இலவம் பஞ்சு ஓட்டுக்குள் இருப்பது. அதைப் பக்குவமாக எடுத்துப் பயன்படுத்தினால் தலையணையாகவோ, மெத்தையாகவோ செய்யலாம். காற்றில் விட்டுவிட்டால் பயன்படாமல் போகும். அதுபோல உன்மனத்தை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்திப் பக்குவத்துக்குத் கொண்டுவர வேண்டும். அப்போது தான் நீ நல்ல காரியங்களை வெற்றி பெறச் செய்ய முடியும். இல்லையேல் உன் மனம் தீய செயல்களில் ஈடுபட ஆரம்பித்துவிடும்." - அன்னையின் அருள்வாக்கு


Do Not Let Your Mind Wander

Cotton is carefully preserved in the pods. It could be put to good use either for making a pillow or a mattress. If it is let loose in the air it will be of no use. The mind is similar to cotton. It should be kept under control. Only then you will do good work and attain victory. Otherwise your mind will start involving itself in evil activities.” - Mother Goddess Adhiparasakti’s Oracle

நல்ல சீவன் சிவனாக மாறும்.ஆன்மிக சக்தியாக மாறும்:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
------------------------------------------------------------
நல்ல சீவன் சிவனாக மாறும்.
ஆன்மிக சக்தியாக மாறும்:
"தெய்வ சக்தி மனித சக்தியாக மாறி, அந்த மனித சக்தி விஞ்ஞான சக்தியாக வளர்ச்சி பெற்றதையே இதுவரை உலகம் கண்டு வந்தது. அது மீண்டும் ஆன்மிக சக்தியாக மாறும்."

ஆன்மாவின் இயல்பு:
"வீட்டில் வைத்து வளர்க்கும் பறவைகளுக்கும்; விலங்குகளுக்கும் எவ்வளவு சிறந்த உணவைக் கொடுத்தாலும் வெளியே சென்று இரை தேடி உண்ணவே விரும்பும். அதுபோல் உன் ஆன்மாவை எவ்வளவு பக்குவப் படுத்தினாலும் உனக்குக் கட்டுப்படாமல் தடுமாறும்; பாவத்தைத் தேடும்."
---------------------------------------------------------------

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வயது உடலுக்கே: ஆன்மாவுக்கு அல்ல: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

எல்லாச் சுழற்ச்சிக்கும் பூமி தான் ஆதாரம்.
ஆதலின் பூமி தான் தாய்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
ஆன்மிகம்:
மொழிகளும் ஆன்மாவும்:

"பொருட்களின் பெயர்கள் மொழிக்கு மொழி மாறுபடும். அனால் ஆன்மா என்பது எல்லோருக்கும் ஒன்று. அதை எந்த மொழியிலும் மாற்ற முடியாது."

வயது உடலுக்கே: ஆன்மாவுக்கு அல்ல:

"எழுபது வயது; எண்பது வயது; தொண்ணூறு வயது என உடலுக்கு வயதாகுமே தவிர, ஆன்மாவுக்கு வயது கிடையாது."
__________________________________________________

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

அருளுக்கும், பொருளுக்கும்
தருமமும், தொண்டும் தான் வழி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு நோய் வந்தால்:

"உடம்பில் உள்ள எலும்பு, நரம்பு இரத்த ஓட்டம் என எல்லாவற்றிற்கும் நோய் வந்தால் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஆன்மாவிற்கு நோய் வந்தால் தாங்க முடியாது. அதற்கு மருத்துவம் கிடையாது.

உன் ஆன்மா தான் ஆதிபராசக்தி! உன் ஆன்மா இறுதியில் காற்றோடு காற்றாய் பிரிந்து விடுகிறது. தூசு பறக்க வேண்டுமானால் காற்று தேவை. உடம்பிலிருந்து ஆன்மா பிரியவும் காற்று தேவை.

பிறப்பு - இறப்பு - எடுப்பது - கொடுப்பது எல்லாமே நான் தான்."

அடிப்படை ஆன்மா தான்:

"கண்ணினால் பார்வையும், பார்வையால் ஒளியும் கிடைக்கிறது. காதினால் ஒலியைக் கேட்க முடிகிறது. நாவினாலும் தொண்டையினாலும் பேச்சு கிடைக்கிறது. கை கால்களால் செயல்பட முடிகிறது.

எல்லா அறிவும் ஒன்றுபட்டுச் செயல்படும்போதுதான் உள்ளம் நல்லதை எண்ணி நல்லதைச் செய்ய முடியும்.

எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது ஆன்மா தான்."
__________________________________________________

"இப்படி இருந்தால் தான் இந்தச் சமுதாயத்தில் வாழலாம் என்று வாழக்கூடாது. இப்படித்தான் வாழவேண்டும். இப்படித்தான் வாழ்வேன் என்று எடுத்துக்காட்டாக வாழவேண்டும்.

நீ உனக்காக வாழ்கிறாய்
மற்றவர்களுக்காக உன் வாழ்க்கை திரிந்துவிடக் கூடாது. பத்துபேர் மதிக்க வாழவேண்டும் என்பதற்காக எப்படியும் வாழக்கூடாது."

அன்னையின் அருள்வாக்கு
__________________________________________________
How Should You Live?

“You must be principled when it comes to living in society. You should set an example for the same. Live for yourself. You should not lead your life in any way in order to please others.”

– Mother Goddess Adhiparasakthi’s
Oracle

__________________________________________________

ஆன்மிகத்திற்கு வந்துவிட்ட பிறகு மனம் திருந்தி வாழ்வதற்கே முயலவேண்டும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்வது தேவையற்றது. அதனால் உனக்குக் காலம் தான் வீணாகும்."

அன்னையின் அருள்வாக்கு

__________________________________________________

Analyzing is Unnecessary

“Once you have entered spirituality you should try to lead a reformed life. Asking question after question and analyzing is unnecessary. You merely waste your time.”

– Mother Goddess Adhiparasakthi’s
Oracle

__________________________________________________

வெள்ளி, 31 ஜூலை, 2009

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது: அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மனத்தில் உள்ள அழுக்கை ஆன்மிகம்


என்னும் அலையானது வெளியேற்றுகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம் என்ற மலைமேல் ஏறி வரும்போது...

" ஆன்மிகம் என்கிற மலைமேல் ஏறி வருகிறபோது பந்தம்,பாசம் என்கிற முட்கள் படர்ந்திருக்கும். அவை குத்தும். எனவே, பந்த பாசங்களை அப்புறப்படுத்திவிட்டு " அம்மா" என்கிற கயிற்றைப் பிடித்துக் கொண்டு எரிவரவேண்டும். ஐயோ கால் சுளுக்குமே என்ற சந்தேகமே வரக்கூடாது. அம்மாவின் அருள் கிடைக்கும் என்ற ஒரே சிந்தனையோடு மேலே ஏறிவர வேண்டும்."

அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக்கூடாது:

" வானொலிப் பெட்டியில் ஒரு அலைவரிசை சரியாக வரவில்லையென்றால் - ஒளியைக் கேட்க முடியவில்லையென்றால் அடுத்த அலைவரிசைக்கு மாற்றிக் கொள்கிறீர்கள். அதுபோல ஒரு தெய்வத்திடம் முழுமையாக நம்பிக்கை வைக்காமல் அடுத்த ஒரு தெய்வத்திடம் ஓடுகிறீர்கள்.

ஆன்மிகம் என்ற வானொலிப் பெட்டியில் அலைவரிசைகளை அடிக்கடி மாற்றக் கூடாது.

ஒருபுறம் மேல்மருவத்தூருக்கு என்று வருவது. இன்னொரு புறம்

நாடிஜோதிடம், ஜாதகம் என்றும் சினிமா, அரசியல் என்றும் அலைவரிசைகளுக்கு மாறக்கூடாது."


"தரும நெறியில் வாழ்பவனுக்குத்தான் இனி பாதுகாப்பு உண்டு."
- அன்னையின் அருள்வாக்கு

“Only those who live by righteousness will be secure.”
– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"உங்கள் உள்ளத்தில் நல்ல எண்ணங்களே தோன்ற வேண்டும். நீங்கள் பேசுகிற வார்த்தைகளிலும் நல்லுணர்வே வெளிப்படவேண்டும். அத்துடன் உங்கள் ஆன்மாவிலும் நல்லெண்ணங்கள் புகுதல் வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


“Good thoughts should come to you. Your speech should have good feeling. Moreover good thought should enter your soul.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

"ஈட்டி எட்டியவரை பாயும்; பணம் பாதாளம் வரை பாயும் என்று தானே இதுவரை கேட்டிருக்கிறீர்கள். பக்தி அதற்கு மேலும் பாயும் என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்." - அன்னையின் அருள்வாக்கு

“You have only heard that the spear will go as far it is thrown, and that money will reach the under-world. I shall make you understand that devotion will go even beyond that.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle




செவ்வாய், 28 ஜூலை, 2009

உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்.அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

அன்னையின் அருள்வாக்கு:

தருமம் என்பது உன் கருமம்


தீர்க்கத் தான் என்று புரிந்து கொள்!

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகப் பாதை:

" நீ செல்கிற பாதை நல்லதாக இருந்தால் உன் பார்வையும் நல்லதாக இருக்கும். வாழ்க்கையில் நீ தேர்ந்தெடுக்கும் பாதை தீமையானது என்றால் உனக்கு ஆபத்துகளும் தொடரும்.

உன்னைச் சுற்றியிருப்பவர்கள் உன் காலைப் பிடிப்பது போல் காலை வாரிவிடுவார்கள். உன் கழுத்தைப் பிடிப்பது போல் நடித்து உன் கண்ணையே குத்துவார்கள்.

நீ ஆன்மிகப் பாதையினைத் தேர்ந்தெடுத்து வாழத் தொடங்கினால் அத்தகைய ஆபத்துக்கள் குறைவு."

ஆன்மிகம் என்ற பாதுகாப்பு:

" ஒரு வீட்டிற்குப் பாதுகாப்பு கருதி வாயிற்படியையும், கதவையும் அமைத்து கொள்கிறீர்கள். அதுபோல உங்கள் வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக ஆன்மிகத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே பிறர் துன்பத்தையும் தன துன்பமாக நினைத்து உதவுகிற மனப்பான்மை முதலில் வரவேண்டும்."

"அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அதனால் தான் உங்களை அடிமேல் அடி அடித்து உங்கள் உள்ளத்தில் உள்ள அழுக்கை நீங்கச் செய்கிறேன்." - அன்னையின் அருள்வாக்கு

“Continuous pressure makes the stone move, and a thorn is picked by another thorn. Hence I am raining blows on you to remove the impurity in your mind.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"அழிவுகள் வரக்காத்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் பொறாமை ஏற்படும். சொத்து, சுகம் எதுவும் உங்களுக்குத் துணை வராது. நீங்கள் செய்யும் தருமம் தான் துணை வரும்."

- அன்னையின் அருள்வாக்கு


“Animals are born. They grow. They procreate with the feeling of lust. Then they die. But man should not live like animals and die. He should lead a progressive life by involving himself in spirituality, by practicing self-control and performing charitable deeds.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"விலங்கினங்கள் பிறக்கின்றன். வளர்கின்றன். காம உணர்வோடு இனப்பெருக்கம் செய்கின்றன. இறந்து போகின்றன. மனிதன் விலங்குபோல் வாழ்ந்து மறையக்கூடாது. ஆன்மிகத்தில் ஈடுபட்டு, உணர்வை அடக்கிக் கட்டுப்படுத்தி, தருமம் செய்து வாழ்ந்து முன்னேறி வரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு


அன்னையின் அருள்வாக்கு:

ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம்


வரை பாயும், பக்தி அதற்கு மேலும் பாயும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அகங்காரம் ஆபத்து:

" பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆழம் விதைகள் பூமியிலும் வளர்ந்து செடியாகின்றன. கோபுரத்தில் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன.

பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்தைச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு பறித்து எறியப்படுகிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேரியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்."

ஆன்மா ஒன்றுதான்:

"இன்றைய மனிதகுலத்தில் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தெய்வத்தை வைத்து வணங்கி வருகிறது. என்றாலும் ஆன்மா என்பது ஒன்றுதான்."







ஞாயிறு, 19 ஜூலை, 2009

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

அழிவு எந்த ரூபத்திலும் வரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு


வைத்துக் கொண்டு தொண்டாற்றி வந்தால் தப்பிக்கலாம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆவிகளும்: பூதங்களும்:

"உலகத்தில் பூதகணங்கள், ஆவிகள் எல்லாம் உண்டு."

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

"ஒரு செடி வளர முதலில் விதை வேண்டும். அந்த விதையை ஊன்ற மனம் வேண்டும். அந்த விதையை ஆழமாக ஊன்ற வேண்டும். அதனை ஊன்றுவதற்கு ஏற்ற பூமி வேண்டும். அது நன்கு வளர்வதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல், ஆன்மிகத்திலும் நீங்கள் ஆழமான ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தக்கபடி பயன் கிடைக்கும்."

ஆன்மிக போதை:

" ஒரு குடிகாரன் போதையில் இருக்கும் போது அடித்தால் அவனுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. போதை தெளிந்தவுடன் வலி தெரிகிறது. அந்த வலியும் அவனது உடலுக்கு தவிர ஆன்மாவுக்கு அல்ல. ஆன்மிக போதை ஏற்பட்டு விட்டால் அது என்றும் தெளியாது. அந்த போதை தான் மேலானது உயர்வானது."

சனி, 18 ஜூலை, 2009

பேரழிவுகள் ஏன் ஏற்படுகின்றன?அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:


நீங்கள் செய்யும் பாவமும், தெய்வ நிந்தனையும்

தான் கோளங்களை வெடிக்கச் செய்கின்றன..


நாத்திக பேய்களை ஓட்டும் மந்திரம் தான்ஓம் சக்தி


அடுத்தவரின் மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ளவேண்டும்


நாத்திகமே மனித அழிவுப் பாதைக்கு முதற்படி என்பதை உணர்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு ஓய்வும் அமைதியும்:


"கடலில் எழும்பும் அலைகள் ஓய்வதில்லை. உள்ளத்தில் எழும்பும் ஆசை அலைகளும் ஓய்வதில்லை. நடுக்கடலில் கடல் அலைகள் ஓய்ந்திருக்கும். அதுபோலவே மனித மனத்தில் உள்ள ஆசாபாசங்கள் என்பவற்றை அடக்கினால் மனம் அமைதியடையும். அப்போது ஆன்மாவிற்கு ஓய்வு உண்டு.

உங்கள் ஐம்புலங்களும் ஒன்றி உள்ளம் குளிரும் போது ஆன்மாவும் குளிர்ந்து அமைதி அடைகிறது."


ஆசைகள் இருக்கிற வரை...


"எரிகிற கொள்ளிக்கட்டையைத் தண்ணீரால் அணைத்த பிறகும் சற்றுநேரத்திற்குச் சூடு இருந்தபடியே இருக்கும். நீங்கள் என்னதான் ஆன்மிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் உள்ளத்தில் ஆசைகள் இருக்கிற வரை துன்பமும் தொடர்ந்து இருக்கும்."


உங்கள் ஆன்ம உணர்வு:


"ஒரு புத்தம் புதுக்கருவியை பேட்டரியால் இயக்குகிறபோது முதலில் நன்றாக வேலை செய்யும் அந்த பேட்டரி தேயத்தேய அந்தக் கருவியும் முன்போல இயங்க மறுக்கும்.

உங்கள் உள்ளே இருக்கிற இதயம் என்ற பேட்டரியைத் தேயாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு பார்த்துக் கொண்டால் தான் உங்கள் ஆன்மாவும் சுத்தமாக இருக்கும்.

உங்கள் மனத்தில் உள்ள சுத்தத்தைப் பொறுத்தே உங்கள் ஆன்மா சுத்தமடையும்."


எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறவேண்டும்:


"ஊருக்கு ஒரு ஆன்மிகவாதியும், வீட்டிற்கு ஒரு ஆன்மிகவாதியும் உருவானால் மட்டும் போதாது. எல்லோருமே ஆன்மிகவாதியாக மாறினால் தான் நாட்டில் அமைதி கிடைக்கும். இரண்டு மனங்களும் ஒன்றுபட்டால் தான் அமைதி கிடைக்கும்."

ஆன்மிகத்தில் அவசரம் கூடாது:


"ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றி, பூ பூத்துக் காய் காய்த்து, பழம், பழுக்கும் வரை காத்திருக்கிறீர்கள். அதுபோலவே ஆன்மிக உலகிலும் காத்திருக்கப் பழக வேண்டும். ஆன்மிகத்தில் அவசரம் கூடாது."

"உள்ளத்தெளிவுவோடு ஆன்மிகப் பணிகள் செய்ய உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன். வேலைக்காரி ஒருத்தி ஏதோ கடமைக்காகப் பணி செய்து பாத்திரம் தேய்த்தால் பாத்திரமும் சுத்தமாவதில்லை. உள்ளத்திற்கும் தெளிவு ஏற்படுவதில்லை. அன்போடும், உள்ளத் தூய்மையோடும் அவள் பணி செய்யும்போது அவளுக்கு அமைதியும், உள்ளத்தெளிவும் ஏற்படும். அந்த தெளிவு உள்ளவர்களுக்கு ஆன்ம முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உண்டு." - அன்னையின் அருள்வாக்கு

“I give you chance do spiritual duties with a clear conscience. If the housemaid washes the vessels for the sake of doing her duty, the vessel remain unclean. Her mind does not gain clarity. If she does her work out of love and with a clear conscience she achieves peace and clarity of mind. Since you work for the welfare of other people your mind becomes clear in its perspective. If your mind is clear then you may have a chance to progress in spirituality. “– Mother Goddess Adhiparasakthi’s Oracle


"பறவைகளின் எச்சத்தினால் விழுந்த ஆலம் விதைகள் பூமியிலும் வளர்ந்து
செடியாகின்றன. கோபுரத்தின் மீதும் விழுந்து செடியாகின்றன. கோபுரத்தில் அந்தச் செடி வளர்வதற்கு ஈரப்பசையும், மழையும் காரணமாகின்றன. பூமியில் வளரும் செடியை விட நான் உயர்ந்தவன் என்று கோபுரத்துச் செடி நினைக்கலாமா...?

ஆன்மிகத்துறைக்கு வந்துவிட்டதால் கிடைக்கிற மதிப்பு, மரியாதைகளை
வைத்து ஒருவன் தான் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளக் கூடாது.

கோபுரத்தில் ஒரு விரிசல் ஏற்படுவதைக் கண்டவுடனே அந்தச் செடி வேரோடு
பறித்து எறியப்படுக்கிறது. அதுபோல ஆன்மிகத்தில் அகங்காரம் தலைக்கேறியவர்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்." - அன்னையின் அருள்வாக்கு

“The banyan seeds that have fallen on the earth from the excreta of the birds grow into plants. The plants grow on the tower because of moisture and rain.

Can the plant growing on the tower think that it is superior to the plant growing on the earth?

One should not think that he has reached a higher status just because of the respect and honor that he gains as he is in the field of spirituality.

That plant gets uprooted and thrown out when a crack is identified on the tower. Similarly arrogant people are thrown out from the filed of spirituality.”- Mother Goddess Adhiparasakthi’s Oracle

"வெறும் தத்துவம் பேசினால் மட்டும் போதாது. தத்துவத்தில் தாதுப்பொருள் (உரம்) இருக்க வேண்டும். தத்துவத்தைக் காட்டிலும் சத்தியம் பெரிது. சத்தியத்தைப் பின்பற்றி வாழாமல் தத்துவம் பேசி, ஆன்மிகத்தில் முன்னேற முடியாது. பக்தி மிகுந்தவனுக்குத் தத்துவம் தேவையில்லை." - அன்னையின் அருள்வாக்கு


“Empty philosophical speech alone is not enough. Philosophy should have manure (matter). More than philosophy, truth is important. You cannot progress in spirituality by talking philosophy without following truth. A person who is more devoted does not require philosophy.” - Mother Goddess Adhiparasakthi's Oracle


எண்ணங்களும்: பிரதிபலிப்பும்


"காற்றலைகள் உயர்வு தாழ்விற்கு ஏற்றபடி எதிரோலிக்கும், அவை வெற்றிடத்தில் வேலை செய்யாது.

மலையைப் பார்த்து ஓ! என்று சப்தம் எழுப்பினால் அந்தச் சப்தமே எதிரொலிக்கும்.

ஒருவனுடைய புகைப்படம் அவனை அப்படியே பிரதிபலிக்கிறது. அதுபோலவே உங்கள் ஆன்மாவில் பதியும் எண்ணங்களே உங்களிடம் பிரதிபலிக்கின்றன.

ஒவ்வொரு ஆன்மாவிற்கும் ஒவ்வொரு நிலையுண்டு, பணத்தாலும் சொத்துக்களாலும் உங்கள் ஆன்மா பக்குவப்பட்டு விடாது. ஆன்மிகம் ஒன்றால் தான் ஆன்மாவைப் பக்குவப்படுத்த முடியும்.

ஆன்மாவினால் தான் இயற்கையை வெல்ல முடியும். அனைத்திற்கும் அழிவுண்டு. ஆன்மாவிற்கு அழிவில்லை."


பணத்திற்கும், ஞானத்துக்கும் தூரம் அதிகம்:


"பணத்தால் பிறரை வேலை வாங்கலாம். அந்த பணத்தை கொண்டு அழிவையும் தேடிக்கொள்ளலாம். பணத்தால் உண்மை அறிவை வாங்க முடியாது."











புதன், 15 ஜூலை, 2009

கருவறைப் பணியும்: கழிவறைப் பணியும்

"தியானத்தின் போது நீங்கள் சிறுவயதில் செய்த தவறுகள், துரோகங்கள் உங்கள் முன் வருகின்றன. அவற்றை அப்படியே விடு! பின்னால் அந்த எண்ணங்கள் மாறும்." - அன்னையின் அருள்வாக்கு

During Meditation

“When you mediate your past sins come before your mind. Leave it behind! Those thoughts will change later!” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

கருவறைப் பணியும்: கழிவறைப் பணியும்"மகனே! கருவறைப் பணியும், கழிவறைப் பணியும் ஒன்று தானடா! ஆனால், அவற்றில் ஒரு சிறு வித்தியாசம்! கருவறைப் பணி செய்யும் போது நீ என்னருகே இருக்கிறாய்! ஆனால் மகனே! நீ கழிவறைப் பணி செய்யும் போது நான் உன்னருகில் இருக்கிறேனடா!" - அன்னையின் அருள்வாக்கு

Duty at the Sanctum Sanctorium: Duty at the Lavatory

“My Son! Both the duties, duty at the sanctum sanctorium as well as the lavatory are the same. But, there is a slight difference. When you do your duty at sanctum sanctorium, you are near to me, whereas when you do the duty at the lavatory I am near to you, my Son!” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

திங்கள், 13 ஜூலை, 2009

செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்பு

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:


பௌர்ணமி தினத்தில் குருவிற்கு பாதபூசை செய்து தான்


செய்த பாவச்செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பது நல்லது

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம் தான் பாதுகாப்பு:

"எந்த அரசும் எல்லோருக்கும் சேர்த்து எந்த நன்மையையும், பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது. உனக்கு நீதான் பாதுகாப்பு, தீய சக்திகள் பெருகிவிட்டன. தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் காலமும் நெருங்கிவிட்டது.

பத்துபேர் நல்லவனாக இருந்தால் நூறுபேர் கெட்டவனாக இருக்கிறார்கள். அந்த நூறுபேர் ஐந்நூறு பேரைக் கெட்டவர்களாக மாற்றுகிறார்கள். அந்த நூறுபேரை மாற்ற ஆன்மிகம் தேவைப்படுகிறது.

ஒரு கதிர் மட்டும் மூட்டையாவதில்லை. பல கதிர்கள் சேர்ந்தால் தான் மூட்டையாக முடியும். அதுபோல் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக ஆன்மிகப் பணிகளைச் செய்ய வேண்டும்."

துன்ப அனுபவங்களால் பக்குவம் ஏற்படுகிறது:

"விளையாட்டுக் குழந்தைக்குச் சோறூட்ட முயன்றால் தொடக்கத்தில் உன்ன மறுக்கிறது. பாட்டுப்பாடி சிரிக்க வைத்து விளையாட விட்டு அதற்கும் ஒரு சோர்வு ஏற்படுகிற நேரத்தில் ஊட்டினால் உணவை ஏற்றுக்கொள்கிறது. அதுபோல் இன்பம், சந்தோஷம் என்றெல்லாம் வருகிறபொழுது சில உண்மைகள் புரிவதில்லை. துன்பம் கஷ்டம் என்ற அனுபவங்கள் கிடைக்கிற பொழுதுதான் சில உண்மைகளை உணர்கிற பக்குவமே வருகிறது. துன்பம் ஏற்பட ஏற்படத்தான் ஆன்மா பக்குவப்படுகிறது. துன்பமும் ஓர் அனுபவமே. அந்த அனுபவத்தையும் ஒவ்வொருவனும் பெறவேண்டும்.."



“Do not deceive yourself thinking that I am ignorant! My blessings will always be with your down the ages. Do not lose yourself for the sake of the three-minute joy” - Mother Goddess Adhiparasakti’s Oracle


"நான் அறியமாட்டேன் என்று உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே! என் அருள் உனக்குக் காலம் காலமாக இருக்க வேண்டும். ஒரு மூன்று நிமிட சந்தோஷத்திற்காக உன்னை இழந்துவிடாதே!" - அன்னையின் அருள்வாக்கு


வெள்ளி, 10 ஜூலை, 2009

அமைதிக்கு வழி:ஆன்மிகத்திற்கு வழி:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பகுத்தறிவை எல்லோருக்கும் தான் கொடுத்திருக்கிறேன். எல்லோருமே

அதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அமைதிக்கு வழி:

"சுற்றிலும் இனவெறி, மதவெறி, பணவெறி எனப் பல வெறிகள் உண்டாகி வருகின்றன. ஆன்மிகத்தைப் பற்றிக்கொண்டு கண்ணும் கருத்துமாக எச்சரிக்கையுடன் வாழ்வேண்டும்."

கவலையும் – கண்ணீரும்:

"வெளியில் வரும் கண்ணீரை நீ துடைத்துக் கொள்ளலாம். ஆனால் உள்ளத்தில் வரும் கண்ணீரையும் கவலையையும் நான் தான் துடைக்க வேண்டும். ஆன்மிகத்தில் ஈடுபட்டிருப்பதால் தான் பலரால் தப்பிக்க முடிந்திருக்கின்றது."

ஆன்மிகத்திற்கு வழி:

"அன்பு, தன்னடக்கம், நிதானம் - இவைகள் தான் ஆன்மிகத்திற்கு வழிவகுக்கும்."


"கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தான் வெளியுலகத்தைப் பார்க்க முடியும் என்பதில்லை. கண்களை மூடிக்கொண்டும் வெளியுலகத்தைப் பார்க்கலாம். தியானம் பழகி வந்தால் இந்த உண்மை புரியும்." - அன்னையின் அருள்வாக்கு

“It is a not necessary that the external world should be viewed only with your eyes open. You can also see the outside world with your eyes closed. You will understand this truth when you practice meditation.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

“There is no meaning in addressing God as Bhaghavan looking up and showing your hand at the sky! Your feet support your body and in turn the earth supports your feet and that earth equivalent to your Mother!” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"பகவானே! என்று மேலே பார்த்தப்படிக் கையைக் காட்டுவதில் அர்த்தம் ஒன்றுமில்லை. உன் உடலைத் தாங்குகிறதே பாதம், அந்தப் பாதத்தைத் தாங்குகிறதே பூமி. அந்தப் பூமி உன் தாய்க்குச் சமம்." - அன்னையின் அருள்வாக்கு


"அம்மாவின் சந்நிதிக்கு வருகிறோமே! சொத்து, சுகம் கிடைக்கவில்லையே! கஷ்டங்கள் நீங்கவில்லையே! என்று உங்களில் சிலர் நினைக்கிறீர்கள். கஷ்டப்படப் படத்தான், அடி படப்படத்தான் அனுபவம் கிடைக்கும். அனுபவங்கள் மூலந்தான் எந்த உண்மையையும் அறிய முடியும், தியானத்திற்கும், ஆன்மிகப் பணிகளுக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்."- அன்னையின் அருள்வாக்கு

“Everyone should have control over one’s mind, body and food. If you control your diet then your body would be under your control; if you mediate then your mind must is controlled” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

“Do not speak of the past events in the field of spirituality! Explain to the world what happens, what is happening and the novel events that I have been bringing forth. Practice recalling them often.” – Mother Goddess Adhiparasakhi’s Oracles

"எவன் எந்தத் துறையில் இருந்தாலும், எவன் ஒருவன் மற்றவர்களுக்கு உதவி செய்கிறானோ அவன் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்." - அன்னையின் அருள்வாக்கு

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

உள்ளத்தில் தூய்மை இருக்க வேண்டும். அது இல்லாது


போனதால் தான் எங்கும் கொலை, கொள்ளை பெருகி வருகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

நாளைய உலகம்:

" நாளைய உலகம் ஆன்மிக உலகம் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதற்கு ஏற்ற சூழ்நிலைகளையும் வளர்ச்சிப் பணிகளையும் நீங்கள் திட்டமிட்டுச் செய்ய வேண்டும்."

சுயநலத்திற்காகக் கூடாது:

" உங்கள் சுயநலத்திற்காக ஆன்மிகத்தைப் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. உண்மை உணர்வுடன் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். அப்போது தான் வளர்ச்சி பெற முடியும்."


ஆன்மாவுக்குப் பால் வேற்றுமை இல்லை:

" ஆன்மா ஆண் உருவத்திலேயும் உண்டு; பெண் உருவத்திலேயும் உண்டு. ஆன்மாவில் ஆண், பெண் வேறுபாடு இல்லை. அந்த வேறுபாடு உடம்பால் அமையும் வேறுபாடே!"
Blog Widget by LinkWithin