வியாழன், 27 மே, 2010

மேலான மங்களங்கள் தரும் கந்த குரு கவசம்


கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்
சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5

சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே.

… செய்யுள் …
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம்
சரவணபவ குகா சரணம் சரணம் …… 10

குருகுகா சரணம் குருபரா சரணம்
சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் …… 15

அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்
அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா
ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ …… 20

காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி
அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் …… 25

தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே …… 30

ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய்
அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே
வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… 35

தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா
பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… 40

அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா
திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… 45

பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ
என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… 50

அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… 55

குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா
குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா …… 60

வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்
மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் …… 65

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் …… 70

ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்
பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் …… 75

அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… 80

அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்
அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… 85

யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா
அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்
நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… 90

பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… 95

ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்
தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… 100

ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… 105

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்
அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் …… 110

உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்
உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா …… 115

அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு …… 120

அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள்
ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா
தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் …… 125

அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் …… 130

சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் …… 135

சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்
தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் …… 140

மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… 145

என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்
நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் …… 150

செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும்
பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் …… 155

கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் …… 160

ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும்
உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும்
நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே …… 165

உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும்
அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும்
முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் …… 170

[முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது!
மந்திரம், அதனை சொல்லும் முறை, எத்தனை முறை ஜெபிக்க வேண்டும், அதன்
பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் விளக்கும் அற்புதப் பகுதி.
மந்திரங்கள் எல்லாம் ஒரு குருமுகமாய்ப் பெறுதல் வேண்டும் என்பது நியதி.
ஆனால், இங்கு ஒரு சற்குருவே இதனைச் சொல்லியிருப்பதால், இதனையே முறைப்படி
முருகன் சந்நிதியில் வைத்து, அங்கிருந்து ஜெபிக்கத் தொடங்கலாம் எனப்
பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். விருப்பமிருப்பின், அவ்வாறே
செய்யலாம்.
முருகனருள் முழுதுமாய் முன்னிற்கும்! ]

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி …… 175

ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால்
மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா …… 180

ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் …… 185

தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா
அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில்
எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் …… 190

மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே
ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே …… 195

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் …… 200

சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்
மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா …… 205

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் …… 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே …… 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் …… 240

ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள்
மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய்
வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் …… 245

துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா …… 250

மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… 255

அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா
வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே
சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய்
ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… 260

ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் (265)

உ ள்ளும் புறமும் உ ன்னருளாம் அன்பையே
உ றுதியாக நானும் பற்றிட உ வந்திடுவாய்
எல்லை இல்லாத அன்பே இறைவெளi என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவமும் அன்பே சக்தியும் (270)

அன்பே †ுரியும் அன்பே ப்ரமனும்
அன்பே தேவரும் அன்பே மனிதரும்
அன்பே நீயும் அன்பே நானும்
அன்பே சத்தியம் அன்பே நித்தியம்
அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் (275)

அன்பே மௌனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும்
அன்பே அனைத்தும் என்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உ றையும் அருட்குரு நாதரே தான் (280)

ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு (285)

எல்லை இல்லாத உ ன் இறைவெளiயைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உ ன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உ ன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உ னதருளால் (290)

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுனெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா (295)

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா (300)

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உ னைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் (305)

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உ ள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களiப்புறச் செய்திடுமே
உ லகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உ ள்ளஇடம் (310)

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் (315)

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே (320)

பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய்
மால் மருகா வள்ளi மணவாளா ஸ்கந்தகுரோ
சிவகுமரா உ ன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா (325)

சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா
பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ
திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்சிகொண்டாய் தமிழகத்தை (330)

கலியுக வரதனென்று கலசமுனி உ னைப்புகழ்ந்தான்
ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா (335)

ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ
ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உ ன்நாமம் (340)

உ ன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக (345)

புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்
நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உ ள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் (350)

அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகாநின் அருளே உ லகமப்பா
அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன்
ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் (355)

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ (360)

சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு (365)

சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு
அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன்
திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ (370)

பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்
பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா (375)

சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உ ணர்ந்திடுவாய்
கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் (380)

கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் (385)

வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்
சாந்தியும் சௌக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் (390)

முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உ ள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் (395)

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் (400)

ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே
உ ணர்ந்துகொண்டு ஓதுவையேல் உ னக்குப் பெரிதான
இகபரசுகம் உ ண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை
துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் (405)

இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷiக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் (410)

தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்
போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளiயும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் (415)

உ ள்ளொளiயாய் இருந்து உ ன்னில் அவனாக்கிடுவன்
தன்னில் உ னைக்காட்டி உ ன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான்
ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து
தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே (420)

கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே
கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் (425)

ஒருதரம் கவசம் ஓதின் உ ள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்
மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்முறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர்
ஐந்துமுறை தினமட ஓதி பஞ்சாட்சரம் பெற்று (430)

ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும்
ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும்
பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே (435)

கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும்
கன்னிமார் ஓடை நீரை கைகளiல் நீ எடுத்துக் (440)

கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உ ருவேற்றி
உ ச்சியிலும் தௌiத்து உ ட்கொண்டு விட்டிட்டால் உ ன்
சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்
கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் (445)

கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப்
பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். 
=============000==============

எல்லா நலங்களும் வளங்களும் தரும் கந்த சஷ்டி கவசம்

 





















======================
காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

=============000==============

புதன், 26 மே, 2010

கோலாப்புர் மஹாலக்‌ஷ்மியும் ஸ்லோகமும்



























தாமரை திகழும் திருக்கரமும்

தளிர்நகை பொழியும் ஒளிமுகமும்

ஷேமம் அளிக்கும் நல்லருளும்

சேவிப் பார்க்கு நிறைவரமும்

மூவர் போற்றும் பெருமையுடன்

முன்னே சங்க பதும நிதி

காவல் செய்ய, காட்சி தரும்

கமல மாதே ! வணங்கு கிறேன்!

தாமரை வடிவாய்த் திருக்கண்கள்!

தாமரை மென்மை தளிர்க்கைகள்!

தூய மங்கல வெண்மை உடை!

துலங்கு சந்தனம்! மணிமாலை!

ஞானம், சக்தி, பலம், செல்வம்

நயத்தகு வீரம், பொலி வென்னும்

ஆறும் பெற்று மூவுலகும்

ஆட்சி புரிபவளே! அருள்க!

இயற்கை.செயற்கை இயற்றுவிப்பாய்!

எல்லா உயிர்க்கும் நலஞ்செய்வாய்!

அனைத்துக் கலைக்கும் அடிப்படையாய்

அரிய செல்வத் திருப்பிடமாய்

நினைத்த தளிக்கும் சுரபியென

நிலவும் மேலாம் வடிவம் நீ!

விளங்கும் தெய்வ இலக்குமியே!

விஷ்ணுவின் இதய இலச்சினையே!

செந்தாமரை தான் உன் வீடு!

திகழும் தூய்மை உன் ஏடு!

அமுதம் தோற்க இனிப்பவள் நீ!

அனைத்திலும் அணுவாய் அமைந்தவள் நீ!

அக்கினி பத்தினி ஸாவாஹா நீ!

அரிய ஸ்வதாவும் ஆனவள் நீ!

எங்கும் எதிலும் எந்நாளும்

இலங்கிச் சிறப்பவளே சரணம்!

அரிய வடிவம் நற் குணமும்

அற்புதப் புகழும் பெற்றவளே!

அதிகா ரத்தில் கொண்டவளே!

அகிலம் முழுவதும் உன்னொளிதான்

அடர்ந்து படர்ந்து தொடர்கிறது!

அழகே! பொறுமை பூண்டவளே!

அமுதப் பாற்கடல் ஈன்றவளே!

அறிவே உருவம் ஆனவள் நீ!

அருளைப் பொழியும் வானவள் நீ!

சிறிதும் குற்றம் அற்றவள் நீ!

ஸ்ரீநா ராயணன் சிந்தை நீ!

உலகின் துயர இருள் நீங்கும்

ஓளியே! பகவான் உட்கொள்ளும்

அமுதே! உன்றன் கடைக்கண்ணால்

அடியேன் இடுக்கண் போக்கிடுக!

தருமம் அனைத்தும் ஒன்றான

தாயே! உன்னைப் போற்றுகிறேன் !

இருப்பிடம் உனக்குப பங்கயம்தான்!

இருப்பதும் கையில் கமலம்தான்!

இருவிழி அதுவும் தாமரைதான்!

இலங்கும் அழகும் அம்மலர்தான்!

கருணை வடிவே ! காசினியைக்

காக்கும் தாயே! வணங்குகிறேன்!

மலரில் தோன்றிய மலர்முகமே!

மகிழ்வாய் முகுந்தன் அரவணைக்கும்

அலைமகளே! இவ் வகிலத்தில்

ஆனந்தத்தின் அடிப்படை நீ!

பூவிற் சிறந்த கமலத்தில்

பொலியும் மாலை அணிந்தபடி

பூவையர் விரும்பக் காட்சிதரும்

தேவதையே! உன்னைத் துதிக்கின்றேன்!

வந்திப் பவர்க்கு வாழ்வளிக்கும்

வாசம் நிறைந்த வரலஷ்மீ!

சந்திப் பவர்க்கு மகிழவு தர

தருணம் பார்த்தே இருப்பவளே!

சந்திர னோடு நீ பிறந்தாய்

சந்திர வதனம் நீ பெற்றாய்!

செங்கதி ரோடு ஒளி போன்றே

திருமா லோடு திகழ்பவள் நீ!

புயங்கள் நான்கு கொண்டவளே!

புதிய நிலாவின் வடிவினளே!

பயன்படு செல்வம் தருபவளே!

பக்தர்க் கருளைப் பொழிபவளே!

நயந்த அன்பர் வாழ்வினிலே

நல்லின் பத்தைத் தருபவளே!

வியக்கும் மங்கல வடிவம் நீ!

வித்தகியே! உனைப் பணிகின்றேன்!

தூயவளே! நீ உலகன்னை!

துலங்கு சக்தியின் முதற் பண்ணை!

மாயச் செய் என் வறுமையினை!

மலர்ப் பொய்கையிலே வாழ்பவளே!

ஆய்ந்த வெண்மணி ஆடையுடன்

அமைதி துலங்க விளங்குகிறாய்!

தோய்ந்த அன்பில் துதிப்போர்க்குச்

சுடரும் பொன்முடி சூட்டுகிறாய்!

விளங்கும் வெளிச்ச உருவோடு

வில்வக் காட்டில் விளையாடி

இலங்கும் திருமால் மார்பினிலே

இடமும் பெற்ற இலக்குமியே!

நலமார் செல்வக் களஞ்சியமே!

நல்ல வாழ்வின் இலக்கியமே!

கலங்கும் பாவ வினை போக்கி

கனக மழையைப் பெய்விப்பாய்!

அன்னை வடிவே! உன்னாலே

அரிய தனமும் தானியமும்

நன்மை பலவும் வருகிறது!

நங்கையர்க்குள்ளே சிறந்தவளே!

பொன்னின் அரண்மனைப் பொலிவினிலே

புண்ணிய வடிவாய் நிறைந்தவளே!

தன்னை பூஜை செய்வோர்க்கு

சகல வரம்தரும் சந்நிதி நீ!

திருப்பாற் கடலில் உதித்தவளே!

திருமால் மார்பிடை பதித்தவளே!

விருப்போ டணுகும் பக்தர்க்கே

வெற்றியை வாழ்வில் தருபவளே!

செறித்த கனகச் சூழலுடன்

சுடரும் மகிழ்ச்சி மண்டபத்தில்

பொருத்த முடனே பொலிகின்ற

பூவே! உன்னைப் போற்றுகிறேன்!

தேசம் போற்றும் உத்தமியே!

ஸ்ரீமகா விஷ்ணுவின் பத்தினியே!

பூசை மலராய்ப் பொலிகண்கள்!

பொன்னைப் பொழியும் திருக் கைகள்!

மோசம் செய்யும் வறுமையினை

முற்றும் அழிக்கும் அருட்பார்வை!

ஆசை யாவும் நிறைவேற்றும்

அன்னை உன்னைப் புவிபோற்றும்!

நவ துர்க்கைக்கும் மூலமென

நாயகியே நீ விளங்குகின்றாய்!

சிவன் அயன் திருமால் மூவருமே

சேர்ந்த சங்கம வடிவம் நீ!

அவரவர் தொழிற்கும் நீ மூலம்!

அன்னை நீயே முக்காலம்!

அவனி சுழன்றிட காரணமே!

அனைத்தும் நிறைந்த பூரணமே!

தேவ மாதர் பணி செய்ய

திகழும் சுடர் நீ! மேன்மை நீ!

மேலாம் பாற்கடல் உதித்தவள் நீ!

மூவர் போற்றும் முதல்வி நீ!

மூவுல குக்கும் இறைவி நீ!

ஆவ தனைத்தும் உன்னாலே!

ஆசி அளிப்பாய் கண்ணாலே!

நாரா யணரின் நெஞ்சமெனும்

நற்றா மரைப்பூ நடுவினிலே

சீராய் அமர்ந்த ஸ்ரீமகளே!

திசைகள் எட்டும் உன் புகழே!

ஆரா திப்பார் இல்லத்தை

அரண்மனை ஆக்கும் பெற்றியளே!

பூரணக் கருணை பொழிந்திடுவாய்!

பொன் மகளே! உன் அடி சரணம்!

தினமும் காலை மாலையிலே

திருவார் இலக்குமி தோத்திரத்தை

மனையப்படுத்தி மலரிட்டு

மங்கல தீப தூபமுடன்

விநயத் தோடு துதித்து வர

வெளிச்சம் வாழ்வில் நிலையாகும்!

கனகம் நிறைந்தே இவ்வுலகின்

காவல ராகிச் செழித்திடலாம்!

வியாழன், 6 மே, 2010

சகல நன்மை பயக்கும் மீனாக்ஷி நவரத்னமாலா ஸ்தோத்ரம்




















கெளரீம் காஞ்சன பத்மினீ தடக்ருஹாம் ஸ்ரீ ஸுந்தரேஸ ப்ரியாம்

நீபாரண்ய ஸுவர்ண கர்துக பரிக்ரீடா விலோலமுமாம்

ஸ்ரீமத்பாண்ட்ய குலாசலாக்ர விலஸத் ரத்னப்ரதிபாயிதாம்

மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[பொற்றாமரைக் குளத்தின் கரையில் கோவில் கொண்டிருபவளாயும், ஸ்ரீ சுந்தரேஸ்வரருடைய பத்னியாகவும், கதம்பவனத்தில் தங்கப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடுபவளும், அதிபிரகாசமுள்ள பாண்டியவம்சம் என்னும் மலையின் சிகரத்தில் விளங்கும் ரத்ன தீபமாயுள்ளவளும், பாண்டிய ராஜனது புத்ரியாகவும், மதுரைக்கு நாயகியாகவும், கையில் கிளி ஏந்தினவளாகவும் உள்ள கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் வேத கதம்ப கானன சுகீம் சரஸ்த்ராடவீ கேகினீம்
வேதாந்தாகில தர்மஹேம நளினீ ஹம்ஸிம் சிவாம் சாம்பவிம்
ஓங்காராம்புஜ நீலமத்த மதுபாம் மந்த்ராம்ர சாகாபிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[வேதமாகிய கதம்பவனத்தில் கிளியாகவும், சாஸ்திரமாகிய காட்டில் மயிலாகவும், உபநிஷத்களிலுள்ள ஸமஸ்த தர்மங்களாகிற பொற்றமரைக் குளத்தில் ஹம்ஸமாகவும், பிரணவமாகிற தாமரைப்பூவில் கருத்த மதம் கொண்ட தேன் வண்டாகவும், மந்திரமாகிற மாமரக் கிளைக்கு கோகிலமாகவும் விளங்கிக் கொண்டு சுந்தரேஸ்வரரின் சக்தியாக, மதுரையின் நாயகியாய், பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் நூபுர சோபிதாங்க்ரி கமலாம் தூணீல ஸஜ்ஜங்கிகாம்
ரத்னாதர்ச ஸமான ஜானுயுகளாம் ரம்யா நிபோருத்வயாம்
காஞ்சீபத்த மனோஜ்ஞபீன ஜகனாமாவர்த்த நாபிஹ்ரதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[நூபுரத்தால் அழகுசேர்க்கும் பத்மம் போன்ற கணுக்காலுடையவளாய், அலங்காரமான துணி போல பிரகாசிக்கிற கைகள் உடையவளாய், ரத்னக் கண்ணாடிகளுக்கு சமமான இரண்டு முழங்கால்களுடையவளாய், வாழைமரம் போல விளங்கும் துடைகளுடன், ஒட்டியாணம் பூட்டப்பட்ட மனோஹரமான பருத்த ஜகனத்துடன் கூடியவளாய், சுழிபோலுள்ள தொப்புள் குழியுடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் வ்யோம ஸமான மத்யமயுதாமுத்துங்க வக்ஷோருஹாம்
வீணா மஞ்ஜுன நாளிகான்விதகராம் சங்கோல்லஸத் சுந்தராம்
லாக்ஷா கர்தம சோபிபாதயுகளாம் ஸிந்தூர ஸீமந்தினீம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[வெட்டவெளி போன்ற சமமான இடுப்பும், உயர்ந்த ஸ்தனங்களூம், வீணையின் அழகான நாளிகைஇல் வைக்கப்பட்ட கைகளும், சங்கம் போன்ற அழகிய கழுத்தும், அரக்கு குழம்பினால் ஒளிரும் இரு பாதங்களும், குங்குமத்துடன் கூடிய வகிட்டினையும் உடைய மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் மஞ்ஜுள மீன நேத்ர யுகளாம் கோதண்ட ஸுப்ருலதாம்
பிம்போஷ்கம் ஜிதகுந்த தந்த ருசிராம் சாம்பேய நாஸோஜ்வலாம்
அர்த்தேந்து ப்ரதிபிம்ப பால ருசிராமாதர்ச கண்ட ஸ்தலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[மீன்களைப் போன்ற கண்களுடையவளும், வில் போன்ற அழகான வளைந்த புருவங்களை உடையவளும், கோவஒப் பழம் போன்ற உதடுகளைக் கொண்டவளும், வெண்மல்லிகைப் பூவைப் நிகர்த்த பற்களையுடையவளும், சம்பக புஷ்பம் போன்ற மூக்கினால் ப்ரகாசிப்பவளும், பாதி சந்திரன் போன்ற நெற்றியுடன் ஒளிர்கிறவளும், முகக்கண்ணாடி போல் இருக்கும் கன்னப் பிரதேசத்தை உடையவளாகவுமான மதுராபுரி நாயகி, பாண்டிய ராஜனுடைய புத்ரியான, கையில் கிளியை ஏந்திய கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் குங்கும பங்க லேபிதலஸத் வக்ஷோஜ கும்போஜ்வலாம்
கஸ்தூரீ திலகாலிகாம் மலயஜாலேபோல்லஸத் கந்தராம்
ராகா சந்த்ர ஸமான சாரு வதனாம் லோலம்ப நீலாலகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[குங்கும குழம்பு பூசினாற்போன்று ஒளிரும் ஸ்தன கும்பங்களுடன் பிரகாசிப்பவளும், கஸ்தூரி திலகத்தோடு கூடிய நெற்றியுடையவளும், சந்தனம் பூசிய சோபையுடன் இருக்கும் கழுத்துடையவளும், வண்டு போன்ற கருத்துச் சுருண்ட முடியை உடையவளான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் காஞ்சன கங்கணாங்கத தராம் நாஸா லஸன் மெளக்திகாம்
மஞ்ஜீராங்குளி முத்ரிகாங்கரி கடக க்ரைவேயகாலங் க்ருதாம்
முக்தாஹார கிரீட ரத்ன விலஸத் தாடங்க காந்த்யா யுதாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[ஸுவர்ணத்தாலான கங்கணம், தோள்வளை இவற்றை தரித்தவளும், மூக்கில் நல்முத்தை அணிந்தவளும், பாதஸரம், விரல்களில் மோதிரங்கள், கால்களில் தண்டைகள், கழுத்தில் அட்டிகை போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டவளும், முக்தாஹாரமும், ஒளிரும் ரத்னங்கள் உள்ள கிரீடமும், பிரகாசிக்கும் தாடங்கங்களும் கூடிய மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் சம்பக மல்லிகாஸுகுஸுயை: புந்நாக ஸெளகந்திகைர்
த்ரோணேந்தீவர குந்த ஜாதி வகுளைராபத்த சூளியுதாம்
மந்தாராருண பத்ம கேதகதள ச்ரேணீ லஸத்வேணிகாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[சம்பகம், மல்லிகை, புன்னாகம், செங்கழுநீர், தும்பை, கருநெய்தல், குந்தம், ஜாதீ, வகுளம் ஆகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கேசத்தை உடையவளும், மந்தாரை, செந்தாமரை, தாழம்பூ இதழ் இவைகளால் வரிசையாக பின்னப்பட்ட பின்னலுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியாக, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

கெளரீம் தாடிம புஷ்பவர்ண விலஸத் திவ்யாம்பராலங்க்ருதாம்
சந்த்ராம்சூபம சாரு சாமரகர ஸ்ரீ பாரதீ ஸேவிதாம்
நாநாரத்ன ஸுவர்ண தண்ட விலஸன் முக்தாதபத்ரோஜ்வலாம்
மீனாக்ஷிம் மதுரேச்வரீம் சுகதராம் ஸ்ரீ பாண்ட்ய பாலாம் பஜே!


[மாதுளைப் புஷ்பம் போன்ற வர்ணமுடைய வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவளும், சந்திர கிரணம் போன்ற அழகான் சாமரங்களைக் கையில் ஏந்தி லக்ஷ்மியாலும், சரஸ்வதியாலும் ஸேவிக்கப்படுபவளும், பலவிதமான ரத்னங்களுடன் கூடிய தண்டத்துடன் கூடிய முத்துக் குடையுடையவளுமான மதுராபுரி நாயகியை, பாண்டிய ராஜனின் புத்ரியான, கையில் கிளியை ஏந்திய, கெளரியான மீனாக்ஷியை ஸேவிக்கிறேன்.]

வாசா வா மநஸாபி வா கிரிஸுதே காயேன வா ஸந்ததம்
மீனாக்ஷீதி கதாசிதம்ப குருதே த்வந்நாம ஸங்கீர்த்தனம்
லக்ஷ்மீஸ்தஸ்ய க்ருஹே வஸத்யனுதினம் வாணி ச வக்த்ராபுஜே
தர்மாத்யர்த்த சதுஷ்டயம் கரதலப்ராப்தம் பவேந்நிச்சய:


[அம்பிகே!, மலையவான் மகளே, வாக்கினாலோ, மனசினாலோ, சாரீரத்தினாலோ எப்போதாவது இடைவிடாமல் ஒருவன் மீனாக்ஷி என்று உனது நாமத்தைச் சொல்வானேயானால், அவனுடைய வீட்டில் லக்ஷ்மியானவள் தினந்தோறும் வசித்து வருவாள். அதேபோல், அவனுடைய முகபத்மத்தில் சரஸ்வதியும் விளங்குவாள். தர்ம, அர்த்த, காம, மோக்ஷமாகிய புருஷார்த்தங்களும் அவன் கைகளில் கிடைத்ததாகும், இது நிச்சயம்.]

சர்வே ஜனா சுகினோ பவந்து!.. சர்வ மங்களானி பவந்து.
இதி சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேக வைபவம் சம்பூர்ணம்

நலம் தருவாள் மீனாட்சி


















"பொதிகை மலைச் சாரலிலே

பூத்து வந்த தென்றலிலே

அல்லி மலர் தண்டெனவே

நடந்துவரும் மீனாட்சி!

கிள்ளை மொழிப் பைந்தொடியாய்

கிண்கிணியென சிரிப்புடனே

கீழ்வானச் செஞ்சுடராய்

திகழும் அழகு மீனாட்சி!

பச்சை நிறச் சாயலிலே

பைந்தமிழின் இனிமையென

பாசமதைப் பொழிந்து தரும்

பால் நிலவே மீனாட்சி!

பொய்கை வளர் மீன்களென

கெண்டை விழி ஓரங்களில்

மைதீட்டிய மலர்க்கொடியே

மங்கையவள் மீனாட்சி!

வைகை நதி நீராடி

வையமெல்லாம் மகிழ்ந்திடவே

வான் முகிலாம் கூந்தலிலே

மலர் சூடிய மீனாட்சி!

மான் மழுவைக் கையேந்தும்

மதியதனைச் சிரம் கொண்ட

மன்னவனாம் சுந்தரேசன்

பாகமமர் மீனாட்சி!

பாற்கடலில் அலைமேலே

பைந்நாகப் பாயினிலே

படுத்துறங்கும் கண்ணனவன்

குலக்கொடியே மீனாட்சி!

செல்லக்கிளி தோளிலே

சிரித்து வரும் வேளையிலே

நல்லதொரு வாக்கு தந்து

நலம் தருவாள் மீனாட்சி!'
Blog Widget by LinkWithin