சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

அமீரகத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழ்!!!

ஆன்மீக, ஆத்திக நண்பர்களே!!!
அமீரகம் வாழ் ஆன்மீக அன்பர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு,இறையருள் பெற ஒரு நல்ல வாய்ப்பு. ஸ்ரீகிருஷ்ண ஜென்மாஷ்டமி உத்சவ அழைப்பிதழை பாருங்கள்,உத்சவம் குறித்த விபரங்களையும் ,வரும் வழிப் படத்தையும்  ப்ரிண்ட் எடுங்கள், உங்கள் அமீரக நண்பர்களுக்கும் சொல்லுங்கள். உத்சவத்தில் குடும்பத்தினருடன் பங்கு பெறுங்கள் . சாதி மத பேதமில்லை.அனைவருக்கும் அனுமதி இலவசம்.எல்லோரும் வருக,இறையருளைப் பெறுக.
===0000===
உத்சவ அழைப்பிதழ்,பெரிதாக்கி படிக்கவும்
ரீஜெண்ட் இண்டர்நேஷனல் ஸ்கூலுக்கு வரும் வழிப்படம்

புதன், 23 டிசம்பர், 2009

சக்திமாலை இருமுடி அணிந்தால்

ஓம் சக்தி! பரா சக்தி!


குருவடி சரணம்! திருவடி சரணம்!


மேல்மருவத்தூர் அன்னையின் அருள்வாக்கு:


தருமம் அழிகிற போது அதர்மம் தலை தூக்கும்


அதர்மம் தலை தூக்கும் போது அழிவுகள் தலை தூக்கும்.


அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:


இருமுடி:


மாந்தரிகம் அழியும்:


"இருமுடி அணிந்தால் உங்களுக்கெதிரான மாந்தரிகம் அழியும்."


ஆன்மிகம்:

பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்:

" உன் ஆன்மாவை நல்ல முறையில் வைத்துக் கொண்டு உன் பரம்பரையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்."

உடல் நலம்:

"சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத முடியும்". நல்ல உடல்நலம் இருந்தால்தான் வாழ்க்கையை அனுபவித்து நன்றாக வாழ முடியும். வரும் முன் காப்பதே நலம். நோய் வந்த பின்பு அவற்றிற்குச் சிகிச்சை செய்யும் பொழுது ஏற்படும் சிரமங்களும் செலவுகளும் மிக அதிகம். அதனால்தான் 'அம்மா' நோய் வராமல் தடுப்பதற்குப் பல எளிய மருந்துகளை அருளியுள்ளாள். அவற்றைத் தவறாமல் கடைபிடித்தால் நோயின்றி வாழ முடியும்.


நோய்கள் வராமல் தடுக்க:-

நோயின்றி வாழ 'அம்மா' பல வழிமுறைகளை கூறியுள்ளாள். அவைகளில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றினால் போதுமானது.

தினமும் மூன்று வேப்பிளையைத் தவறாமல் சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.

வியாழன், 5 நவம்பர், 2009

வேலையும் – சோறும் அன்னையின் அருள்வாக்கு

 

வேலை செய்தால் சோர்வு ஏற்படும். ஆனால் சோறு கிடைக்கும். சோம்பேறித்தனமாக வாழ்ந்தால் சோறும் கிடைக்காது. சோதனையும் ஏற்படும்." - அன்னையின் அருள்வாக்கு

Work and Sustenance

“Though one may become weary after a day’s tedious work, he may atleast get good food to eat. But if he is lazy, he cannot survive at all. He will only face unnecessary trials and tribulations.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
பொய்யும், பித்தலாட்டமுமே இன்றைய அழிவுகளுக்கு முக்கியக் காரணம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:
ஆன்மாவை உணர வேண்டுமானால்.....
"மனிதர்களுக்குக் கண், காது, மூக்கு, பல் என அழகான உறுப்புகள் அமைந்திருந்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க முடிகிறது.அதுபோல் உன் உள்ளே ஆன்மா என ஒன்று இருந்தாலும் உள்ளத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளால்தான் அதனை உணர முடியும்.

கல்லுக்குள் ஈரம் இருப்பதுபோல, உங்கள் உள்ளத்திற்குள் வளர்ச்சி இருக்க வேண்டும். உழைக்க வேண்டும், மற்றவர்கட்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது."

சோதிடம் நாடி அலையாதே

அம்மாவிடம் வந்தோம்; நம்முடைய கஷ்டம் தீரவில்லையே என்று நினைக்கக்கூடாது. எந்தச் சோதனை, கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஜாதகம், சோதிடம், நாடி என்று போனால் அவன் இன்ன தோஷம் இருக்கிறது; இன்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுவான். உனக்குப் பணம் தான் செலவாகும். தலைவலி போக மருந்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்." - அன்னையின் அருள்வாக்கு

Don’t Go After Astrology
“Do not think that your problems are not solved despite your coming to Adhiparasakthi AMMA. You should endure your trials, sorrows and worries. Instead if you approach the astrologers with horoscopes, he will point out certain flaws and atonement. You will incur expenses. If you take medicine for head ache, you will start suffering from cold.”  – Mother Goddess Adhiparasakthi’s Oracle
Blog Widget by LinkWithin