செவ்வாய், 27 அக்டோபர், 2009

மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
பொய்யும், பித்தலாட்டமுமே இன்றைய அழிவுகளுக்கு முக்கியக் காரணம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:
ஆன்மாவை உணர வேண்டுமானால்.....
"மனிதர்களுக்குக் கண், காது, மூக்கு, பல் என அழகான உறுப்புகள் அமைந்திருந்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க முடிகிறது.அதுபோல் உன் உள்ளே ஆன்மா என ஒன்று இருந்தாலும் உள்ளத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளால்தான் அதனை உணர முடியும்.

கல்லுக்குள் ஈரம் இருப்பதுபோல, உங்கள் உள்ளத்திற்குள் வளர்ச்சி இருக்க வேண்டும். உழைக்க வேண்டும், மற்றவர்கட்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது."

சோதிடம் நாடி அலையாதே

அம்மாவிடம் வந்தோம்; நம்முடைய கஷ்டம் தீரவில்லையே என்று நினைக்கக்கூடாது. எந்தச் சோதனை, கஷ்டம் வந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு ஜாதகம், சோதிடம், நாடி என்று போனால் அவன் இன்ன தோஷம் இருக்கிறது; இன்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுவான். உனக்குப் பணம் தான் செலவாகும். தலைவலி போக மருந்து சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும்." - அன்னையின் அருள்வாக்கு

Don’t Go After Astrology
“Do not think that your problems are not solved despite your coming to Adhiparasakthi AMMA. You should endure your trials, sorrows and worries. Instead if you approach the astrologers with horoscopes, he will point out certain flaws and atonement. You will incur expenses. If you take medicine for head ache, you will start suffering from cold.”  – Mother Goddess Adhiparasakthi’s Oracle

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin