சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மா பழுது பட்டால்.... அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

 ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்ற வரும் ஏற்றமிகு விழாவே தைப்பூச ஜோதி.
  அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
அடக்கி ஆள்வது ஆன்மா தான்:
"ஆன்மிகத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்க வேண்டும். பொறாமையும் பொச்சரிப்பும் இருக்கக் கூடாது. ஒருவரைப் பற்றி மற்றவர் கோள் சொல்வதும், புறம் பேசுவதும் கூடாது. இத்தகைய தகாத பழக்கங்களை வைத்துக் கொண்டு ஆன்மிகத்தில் ஈடுபட்டும் எனக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை.

மனத்தை அடக்கி ஆளவேண்டும். மனத்தையும் அவயங்களையும் அடக்கி ஆள்வது ஆன்மா தான் என்றாலும் மனத்தை அடக்கி ஆன்மாவைப் பக்குவ நிலைக்குக் கொண்டுவர வேண்டும்."
ஆன்மா பழுது பட்டால்....
"பந்தம், பாசம், பணம் என்றெல்லாம் உங்களை ஆடவைப்பது ஆன்மா தான். வண்டி பழுது பட்டு விட்டால் பழுது பார்த்து ஓட வைக்கலாம். ஆனால் மனிதனின் ஆன்மா என்ற இயந்திரம் பழுதுபட்டுவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin