சனி, 10 அக்டோபர், 2009

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:அன்னையின் அருள்வாக்கு:

ஓம் சக்தி ! பரா சக்தி !
குருவடி சரணம் ! திருவடி சரணம்!
அன்னையின் அருள்வாக்கு:
 எங்கும் தேடி அலையாமல், விலை கொடுத்து வாங்கவும்
முடியாமல், விற்கவும் முடியாமல் இருப்பது  பக்தி ஒன்று தான்.
அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:
 ஆன்மிகம்:
ஆன்மாவே உறுதுணை:
"ஆன்மா தான் உடலை இயக்குகிறது. அதுதான் உணவில் ஆசையைத் தூண்டுகிறது. அதுவே உணவில் ஆசை, மற்றவற்றில் ஆசைகளை ஏற்படுத்துகிறது. இவ்வளவுதான் அளவு! என்று சொல்வதும் ஆன்மா தான். பிற உயிர்களைச் சிரிக்க வைப்பதும், பாடவைப்பதும், ஆட வைப்பதும் ஆன்மா தான். உங்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருப்பதும் ஆன்மா தான்!"

ஆன்மாவில் படியும் அழுக்குகள்:
"கண்ணாடியில் தூசுபடிந்து விட்டால் அடிக்கடித் துடைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துகிறீர்கள். அதுபோல் ஆன்மாவிலும் ஆசை, அகந்தை, பொறாமை, கோபம் முதலிய அழுக்குகள் படிகின்றன. அந்த அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்மாவை ஒரு நிலைப்படுத்திப் பக்குவப் படுத்த வேண்டும். ஆன்மா என்ற சக்தி உடலை விட்டுப் போய் விட்டால் எதுவும் இல்லை."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin