செவ்வாய், 14 ஜூலை, 2009

எங்கேயும் அலையாதே:ஆன்மாவை அடக்கி வை!

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

கௌரவத்திற்காக மனிதன் தேடும் பொன்னாலும்

பொருளாலும் அவனுக்கு அழிவு உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உலகத்திற்கு ஆன்மா:

"இயற்கை வளமாக இருந்தால் தான் உங்கள் சட்டியிலும் வளம் இருக்கும். பெட்டியிலும் வளம் இருக்கும். உலகத்திற்கு இயற்கை தான் ஆன்மா!"

ஆன்மிகத்தில் உறுதியும் நம்பிக்கையும்:

"ஆற்றோரத்தில் வளர்ந்த ஆலமரம், ஆணிவேர் விட்டு உறுதியாக வளர்ந்திருக்குமேயானால் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் உறுதியோடு நிலைத்து நிற்கும். அதுபோல் ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியும் உள்ளவர்கள் நிலைத்து நிற்க முடியும். எந்தத் தீமையும் அவர்களை அசைக்க முடியாது."

எங்கேயும் அலையாதே:

"களிமன்னை எடுத்து ஓர் உருவமாக்காலாம். பானையாக்கவும் செய்யலாம். வேறொரு பாத்திரமாகவும் ஆக்கலாம். ஒரு கல்லையும் ஓர் உருவமாக்கலாம். சிலையாக்கலாம். தெய்வமாகவும் ஆக்கலாம். ஆனாலும் அந்தச் சிலைக்கு ஆன்மா கிடையாது.

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

மன்றத்தினர் வேள்விகளை வியாபாரமாக ஆக்கக்

கூடாது. அவ்வாறு ஆக்கினால் விஷமாக மாறிவிடும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகத்தில் அவசரம் கூடாது:

"ஒரு படி அரிசியை மொத்தமாக இரண்டு கைகளால் அள்ளமுடியாது. ஒரே நேரத்தில் பத்துப்படிகளைத் தாண்ட முடியாது. ஆன்மிகத்திலும் ஒரேயடியாக முன்னேறிவிட முடியாது. படிப்படியாகத் தான் முன்னேறிவர முடியும்."

ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்ளாவிட்டால், உன்னிடம் உள்ள சக்தி உனக்கே சதிசெய்ய ஆரம்பித்துவிடும்."

உன்னிடம் உள்ள ஆன்மசக்தி:

"உன் ஆன்மா அடக்கமாக இருந்தால் பலன் உண்டு. அது உன்னைவிட்டு அகன்ற பிறகு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பிறரால் எந்த உதவியும் கிடைக்காது. அவனவன் ஆன்மாவால் தான் அவனவனுக்குப் பயன் உண்டு. வெளி உதவிகள் கிடைப்பதெல்லாம் உன் ஆன்மாவைப் பொறுத்தது.

உன் ஆன்மசக்தியை பயன்படுத்தினாலே எல்லாம் பெறமுடியும்."

உன் ஆன்மா தான் கடவுள்:

"உன் ஆன்மாவை அறிந்து கொண்டால் நீயும் கடவுள் ஆகலாம். உன் ஆன்மா தான் கடவுள். அந்த ஆன்மாவை அறியாதவனெல்லாம் தன்னைக் கடவுள் என்று கூறிக்கொள்கிறான்."

விதைபோட்டால் தான் மரம் வளரும். கரு என்ற ஒன்று இருந்தால் தான் உரு என்ற வடிவம் வளரும். அனைத்துக்கும் மூலக்கருவாக இருப்பது எதுவோ அதுவே தெய்வம்!"


ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

பேருக்கும், புகழுக்கும் அடிமைப்படாதே.

வெற்றியோ, தோல்வியோ கவலைப்படாதே.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உங்கள் ஆன்மவளர்ச்சியைப் பொறுத்து:

"ஒரு முட்டையில் வளர்கிற புழு எந்த இனத்தைச் சேர்ந்தது என்று முட்டையைப் பார்த்த அளவில் தெரிவதில்லை. முட்டை உடைந்து புழு வெளிப்பட்டு, வளர்ச்சி பெற்ற பிறகே அது வண்டா, குளவியா, பட்டுப்பூச்சியா, ஈயா, எறும்பா என்று தெரிந்து கொள்ள முடிகிறது.

உங்கள் உள்ளமும் முட்டையில் உள்ள புழுவைப் போன்றது. உங்கள் ஆன்மா வளர்ச்சியைக் கொண்டு தான் நீங்கள் இன்னார், இப்படிப்பட்டவர் என்று கூறமுடியும்."

ஆன்மாவை அடக்கி வை!

"பால் குடித்த பிறகு தான் பசியுள்ள குழ்ந்தையின் அழுகை அடங்கும். உன் ஆன்மாவையும் அடக்கி வைத்தால் தான் உள்ளத்திற்கு அமைதி ஏற்படும். அப்போது உனக்குத் தேவையானதெல்லாம் கிடைக்கும். உன் தேவைகளையெல்லாம் நிறைவேற்றித் தரும் சக்தி உன் ஆன்மாவிலேயே அடங்கியுள்ளது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin