ஞாயிறு, 26 ஜூலை, 2009

பணம் பணம் என்று அலையக்கூடாது. - அன்னையின் அருள்வாக்கு

பணம் பணம் என்று அலையக்கூடாது. பணம் பிணத்துக்குச் சமம். சேர்த்து வைத்த பணத்தைத் தான, தருமங்கள் போன்ற நியாயமான வழிகளில் செலவிட வேண்டும். இறுக்கிப் பிடித்துச் சேர்க்க நினைத்தால் அது உனக்குக் கடன்களாகவும் நோய்களாகவும் பெருகி உன்னையே அழித்துவிடும்." - அன்னையின் அருள்வாக்கு

“Do not go after material wealth. Money is equivalent to a corpse. Accumulated wealth should be spent in just deeds of charity and righteousness. If you think of accumulating money by being stingy, it will multiply into your debts and diseases and will lead to your destruction.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

உழைக்காமலே உயர்வு

"இன்று மக்களில் 99 சதவீதம் உழைக்காமலே சாப்பிட வேண்டும்; வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனப்பான்மை பெருகினால் எதிர் காலத்தில் எல்லாத் துறைகளிலும் பிரச்சனை ஏற்படும்." அன்னையின் அருள்வாக்கு

Atrocities will Result in Destruction

“99% of the world is infested with atrocities. Hence there is ruin. If a person is not serious in his utterings he might face destruction.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

உள்ளம் என்ற பாத்திரத்திற்குத் தக்கபடி

ஆற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய குடத்தை எடுத்து வருபவன் அதில் தண்ணீர் எடுத்துக் கொள்கிறான். சிறிய குடத்தை எடுத்து வருபவன் அதற்குத் தக்கபடி தண்ணீர் முகர்ந்து செல்கிறான். மண் செப்பை எடுத்து வருபவன் அதற்குத் தக்கபடி தண்ணீர் முகர்ந்து செல்கிறான். எதையுமே எடுத்து வராதவன் கையாலாவது அள்ளிக் குடிக்கலாம் என்று அள்ளிக் குடிக்கிறான். உங்கள் உள்ளம் எனும் பாத்திரம் எப்படியோ அப்படியே அந்த அளவுக்குத் தக்கபடி உங்களுக்கு பலங்களும் கிடைக்கும். எனவே பொறாமை அழுக்கு ஆகியவற்றைத் தவிர்த்துக் கொண்டு வா!" - அன்னையின் அருள்வாக்கு

Ladder – Boat

“Ladder lifts up others. But never lifts itself up. Boat helps others to reach the bank. But it never reaches the bank on its own accord. Spirituality helps you to come up and makes you help others to come up. You can reach the bank and you can make others also to reach the bank.” - Mother Goddess Adhiparasakthi’s Oracle

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

தற்போது காலவெள்ளம் காமவெள்ளமாக

மாறி வருகிறது.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

அரசியலும் ஆன்மிகமும்:

" வெட்டு, குத்து, வேண்டுமென்றால் அரசியலுக்குப் போ! மனநிம்மதி வேண்டும், சுபிட்சம் வேண்டும், மழை வேண்டும் என்றால் ஆன்மிகத்திற்கு வா!"

கண் திருஷ்டிக்குள்ள சக்தி:

" ஒரு மனிதனின் கண் ஒளிக்கு ஒரு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு."

படித்தவனும் - பாமரனும்:

" அடிமட்டத்தில் இருப்பவனுக்கும் ஆன்மிகம் உண்டு. அதிகம் படித்தவன் விளக்கொளியில் மயங்கி அழியும் விட்டில் பூச்சி போல அழிந்துபோவான்."

முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும்

"மகனே! குழந்தை பிறந்து அதற்குப் பசி ஏற்படுகிறது. பசியால் அழுகிறது. கை கால்களை உதறிக் கொள்கிறது. அதன் தேவைக்காகப் பசியை ஏற்படுத்தி வைத்திருக்கிறேன். அழுகிற சக்தியைக் கொடுத்திருக்கிறேன். அழுகிற குழந்தையைத் தூக்கி வைத்துத் தாய் என்ன செய்கிறாள்? தன் மார்பில் வைத்துக் கொள்கிறாள். பாலை உறிஞ்சிக் குடித்துக் கொள்ள வேண்டிய முயற்சி யாருடையது? அந்தக் குழந்தையினுடையதல்லவா? அது போல இங்கே சில வாய்ப்புகளை நான் உங்களுக்கு ஏற்படுத்தித்தான் கொடுக்க முடியும். மற்ற முயற்சிகளை நீ தான் மேற்கொள்ள வேண்டும். நீ தான் முயன்று உயரவேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin