ஞாயிறு, 19 ஜூலை, 2009

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

அழிவு எந்த ரூபத்திலும் வரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு


வைத்துக் கொண்டு தொண்டாற்றி வந்தால் தப்பிக்கலாம்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆவிகளும்: பூதங்களும்:

"உலகத்தில் பூதகணங்கள், ஆவிகள் எல்லாம் உண்டு."

ஆன்மிகத்தில் ஆழமான ஈடுபாடு:

"ஒரு செடி வளர முதலில் விதை வேண்டும். அந்த விதையை ஊன்ற மனம் வேண்டும். அந்த விதையை ஆழமாக ஊன்ற வேண்டும். அதனை ஊன்றுவதற்கு ஏற்ற பூமி வேண்டும். அது நன்கு வளர்வதற்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதுபோல், ஆன்மிகத்திலும் நீங்கள் ஆழமான ஈடுபாடு வைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறதோ அந்த அளவிற்குத் தக்கபடி பயன் கிடைக்கும்."

ஆன்மிக போதை:

" ஒரு குடிகாரன் போதையில் இருக்கும் போது அடித்தால் அவனுக்கு எந்த வலியும் தெரிவதில்லை. போதை தெளிந்தவுடன் வலி தெரிகிறது. அந்த வலியும் அவனது உடலுக்கு தவிர ஆன்மாவுக்கு அல்ல. ஆன்மிக போதை ஏற்பட்டு விட்டால் அது என்றும் தெளியாது. அந்த போதை தான் மேலானது உயர்வானது."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Blog Widget by LinkWithin